×

பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது

தூத்துக்குடி, ஏப். 30: தூத்துக்குடி கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(43), பேக்கரி மாஸ்டராக வேலை செய்து வருகிறார். தூத்துக்குடி டிஎம்பி காலனியை சேர்ந்தவர் காமராஜ்(43), கொத்தனார் வேலை செய்து வருகிறார். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் கந்தசாமிபுரம் மெயின் ரோட்டில் உள்ள கோயில் அருகே மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காமராஜ், மாரிமுத்துவை பூச்சு கரண்டியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாரிமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி வடபாகம் எஸ்ஐ மாரிமுத்து வழக்கு பதிந்து காமராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்.

The post பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Marimuthu ,Kandasamipuram, Thoothukudi ,Kamaraj ,Thoothukudi TMP ,Colony ,Kandasamypuram ,
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...